Thursday, November 09, 2006

வந்துட்டோம்ல!!! வந்துட்டோம்ல!!!

அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு...

எனது நிறுவனத்தில் எனக்கும் பங்குதாரக்கு இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் அதை நிவர்த்தி செய்வதிலும், பின் நிறுவனத்தை தனிப்பட்டமுறையில்(தனிக்கடை விரிச்சாச்சு:))) நடத்த வேண்டி இருந்ததாலும் என்னால் தொடர்ச்சியாக தமிழ்மணத்தில் எழுத இயலவில்லை,கடந்த 2 மாதங்களாக என்னால் உங்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமான் ஒன்று, இனி அது போல் நிகழாது என்ற எண்ணத்துடம் இதோ மீண்டும் உங்களின் நண்பன்,
இப்பொழுது அனைத்தும்பிரச்சனைகள் முடிந்து சகஜ நிலை திரும்பியதால் நானும் திரும்ப வந்துவிட்டேன்(நான் திரும்பிட்டேன்னு சொன்னதும் யாருப்பா அது அழுவுறது?--ஓ ஆனந்தக் கண்ணீர இருக்கட்டும் இருக்கட்டும்).


நான் புதியப் பதிவுகளையும்,மறுமொழிகளையும் இடாவிட்டாலும், தொடர்ந்து தமிழ்மணத்தைப் படித்துக் கொண்டு தான் இருந்தேன்,திரும்ப வந்த அணில்குட்டிக்கு வாழ்த்துக்கள்,பாலா அண்ணே உடம்ப பாத்துக்கொங்க அடுத்து டொங்கு வருதாம்,ஒருவேளை வந்தாலும் பொன்ஸ் அக்காவை ஏமாத்திடாதீங்க ஏன்ன அவங்க மாலை எல்லாம் வாங்கி வச்சு காத்திட்டிருப்பாங்க,
தடாலடியார் காட்டுல இப்போ ஒரே "மழை"தானா?

கடந்த மாதப் போட்டி வெற்றியாளர் நண்பர் லக்கிலுக்கிற்க்கு வாழ்த்துக்கள், இந்த மாதம் ஆப்புகளை வாங்கிக் குவிக்கும் அன்பு நண்பன் ரசிகவிற்க்கும் வாழ்த்துக்கள்,கடந்தவார நட்சத்திர நாயகன் நண்பர் நாகையாருக்கும், இந்தவார தேக்கடியாருக்கும் வாழ்த்துக்கள்,
என்னப்பா சங்கமெல்லாம் எப்படி இருக்கு? சிங்களே நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிங்க, மாப்பு முருகேசா ஆப்பு கொஞ்சமா வாங்கினியா? கப்பி சங்கு என்ன சொல்லுது? பாசக்காரப் பய பாண்டி எப்படி இருக்க?என் பாசத்திற்க்குரிய சகாவும் எனது DIRECT ருமாகிய தேவு நலமா?கோவியாரே சுகமா? அந்த கிழக்கே போன ரயில் என்ன ஆச்சு?, துபாய்க்கார மச்சான் எப்படி இருக்கீக? அண்பர் SK தாங்கள் கூறியது போல் தொழிலை கவனித்துவிட்டு தான் வந்துள்ளேன், வாழ்த்தியதற்க்கு நன்றி,
பெயர்குறிப்பிட மறந்த நண்பர்கள் மன்னிக்கவும்,
மீண்டு(ம்) வந்த எனக்கு மறுமொழியாக உங்களின் வாழ்த்துக்களையும் வசவுகளையும் தெரிவிக்கவும்,
இனி நான் தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்,

அன்புடன்...
சரவணன்.

Friday, September 08, 2006

உங்க செல்போனில் ஐஸ் இருக்கா?

வணக்கம் நண்பர்களே!
கடந்த வாரம் ஊருக்குப் போய்விட்டதாலும், பின் வந்த நாட்களில் வேலைப்பளுவின்(??!)காரணமாகவும் என்னால் தொடர்ந்து பதிவிடவும், நல்ல பல பதிவுகளுக்கு பின்னூட்டமிடவும் முடியவில்லை!
நான் வார வாரம் ஆனந்தவிகடன் படிக்கும் பழக்கமுள்ளவன், இந்தப் பதிவு கூட கடந்த வார ஆனந்தவிகடனில் வந்த ஒரு தகவல் தான்.(இதே தகவளுடன் வேறு யாரேனும் பதிவிட்டிருந்தால் உங்களின் கோவத்தையும் கண்டனத்தையும் பின்னூட்டமாக தெரிவிக்கவும்:)))))


தலைப்பைபார்த்து வந்துட்டீங்க உங்களை ஏமாத்த விருப்பமில்லை, இந்த ஐஸையும் பார்த்துக்கோங்க!



ஹேலோ! எங்க கிளம்புறிங்க இனிமேல் தான் விசயமே இருக்கு!,Subject:ice என்று உங்களுக்கு வரும் மெயிலை ஐஸ்வர்யாராயின் விதவிதமான படங்கள் தான் என்று ஜொள்ளியபடி திறந்து பார்த்தால் ஏமாந்து தான் போவீர்கள்,உண்மையில் அது நமது ஆபத்தான நேரங்களில் காப்பாற்றக்கூடிய ஒரு உபயோகமான வழியைக் கூறும் மின்னஞ்சலாம்!


உலகின் அதிகப்படியானவர்களிடத்தில் எப்போதும் இருப்பது செல்போன்கள் தான், விபத்து நேரங்களில்,சுயநினைவின்றி விழுந்துவிட்டால்,தொலைந்துவிட்டால்,அவரைப் பற்றி யாருக்கு தகவல் சொல்லுவது எனக் குழம்பும் நல்லவர்களுக்கு(??!) ஆபத்பாந்தவனாகக் கை கொடுப்பதும் அதே செல்போன் தான், ஆனால் செல்போனை எடுத்துப் பார்த்தால், அதில் நூற்றுக்கணக்கான நம்பர்கள் பதிந்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களில் யார் இந்த நபருக்கு மிகவும் வேண்டியவர் என்று எப்படிக் கண்டுபிடிப்பதும் கடினமே!

அனைவரும் சுலபத்தில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பொதுப் பெயரில் முக்கிய நம்பர்களைப் பதியலாம் என்று ஒரு ஆலோசனையை லண்டனில் உள்ள ஒரு பாராமெடிக்கலிஸ்ட் வழங்கினார், யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு "தி ஈஸ்ட் ஏஞ்சலிகன் ஆம்புலன்ஸ் சர்வீஸ்" நிறுவனம் "In Case of Emergengy"என்பதைச் சுறுக்கி "ice" என்று பெயர் வைத்தது.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், உங்களின் ஆபத்து நேரங்களில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களின் தொலைபேசி எண்ணை ice என்று குறிப்பிட்டு செல்போனில் பதிவுசெய்யுங்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தால் ice1,ice2,ice3 என வரிசையாகப் பதியலாம்,

நான் உடனே எனது தந்தையின் செல் , எனது வீட்டு எண், மற்றும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர்களின் எண்களை ice-ல் வரிசைப்படுத்தினேன்.வெளிநாடுகளில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும்,மிகவும் பயன் தருகிறதென்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது, வெளிநாட்டுவாழ் பதிவர்களுக்கே வெளிச்சம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாமும் பயன்படுத்தலாமே!


அன்புடன்...
சரவணன்

Wednesday, August 16, 2006

எனது கிராமம் -ஒரு ரவுண்டு போகலாமா!!!

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது என்று நண்பர் திரு.கோவி.கண்ணன் அவர்கள் வருத்தப்பட்டிருந்தார், எனது பார்வையிலும் இங்கே சாதீயப் பேச்சுக்களும்,ஒரு வித இறுக்கமும் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது, இவைகளில் இருந்து உங்களை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள எனது கிராமத்திற்க்கு "சாலி"யா ஒரு ரவுண்டு போகலாம் வாரீகளா..?


ஓபன் பண்ணின(தேவு கூட டிஸ்கசன்ல இருந்த பாதிப்புல இருந்து இன்னும் வெளிவர முடியல) ஊருக்குள்ள போன ஒடனேயே ஒரு பெரிய ஆறு, அதுல மேல பாக்குற படத்துல இருக்குற மாதிரி பெரிய பெரிய யானையெல்லாம் குளிக்கும், அப்படியே நடந்து ரோட்டுக்கு வந்தா ரெண்டு பக்கமும் சும்மா பச்சை பசேல்னு எங்கே பாத்தாலும் பசுமையான வயல்வெளிகள், ரோட்டோரம் எப்பவும் வத்தாம ஓடுர கிளைஆறு, பக்கத்து வயல்களில் நாத்து நடுர பெண்களின் தெம்மாங்குப் பாட்டு,இடை இடையே குயில்களின் இசை ஆவர்த்தனம் வேறு, அப்படியே "அழகியபாண்டிபுரம்" உங்களை அன்போடு வரவேற்கின்றது, என்று தங்க நிற போர்டு, அப்படினு கற்பனைல இருந்தீங்கன்னா சாரி....,

கொஞ்சம் குருதய விட்டு கீழ எறங்குங்க எங்க ஊர்"வளநாடு" வந்திடுச்சு,என்னது..? ஊரப் பாத்ததும் உடனே கெளம்புறீகளா, ஓ! நீங்க எதிர் பார்த்த மாதிரி இல்லாம இங்கன வெறும் கருவ மரமும்,கரிச காடும்,சோத்துக் கத்தாலையுமா இருக்கா? என்னப்பூ பண்ணூறது இந்த பூமிலதேன் எங்க பொறப்பு சாவு எல்லாம், இதுதேன் எங்களுக்கு கஞ்சி ஊத்துர பூமி, இதுதேன் எங்க சாமி,

அவுக திரும்பவும் கெளம்புறேனு சொல்லுராகளா..?சரிப்பு நல்ல படியா போய்ட்டு வா.., ஆனா பஸ் இன்னும் ஒரு 2 மணி நேரமோ,3 மணி நேரமோ கழிச்சி தான் வரும் அதுவரக்கும் அந்தா தெரியுது பாரு கருவ மரம் அங்கென போய் ஒதுங்கி நில்லு, வழக்கமான சாதிச் சண்டை "பஸ் எரிப்பு" இல்லைனா பஸ் வரும் , என்னது கூட்டமா அதெல்லம் ரெம்ப இருக்காதுப்பூ,டாப்புலயும் பஸ்ஸோட சைடிலயும்தேன் இந்தப் பள்ளிக்கூட பக்கிபுள்ளக தொங்கிட்டு வரும் உள்ள சீட்டெல்லம் உனக்கு சிலாவத்தா கெடைக்கும் கவலப்படாத...

சரி மத்தவுக வாங்க நம்ம போவொம், எங்க ஊர் வளநாடு எனும் கிராமம், இது பரமக்குடி-ராமேஸ்வரம் NH-49 ரோட்டுல இருக்குற சத்திரக்குடி என்னும் "சின்ன டவுன்"லிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது,இது முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்டது(முதுகுளத்தூர் நியாபகம் இருக்கா..? திரு.அசுரன் மற்றும் திரு.செல்வன் ஆகியோர் தங்களின் சமீபத்திய பதிவிற்க்காக அடிக்கடி வந்து போன ஊர்).

எங்க ஊர்ல மொத்தம் 100 வீட்டுக்கும் கொறச்சலாத்தேன் இருக்கும் ஆமா,இதோ ஊரின் எல்லைல சோத்தாங்கைபக்கம் இருக்குறது கம்மாய்,

அங்க ஆம்பளைங்களுக்கும் பொம்பலைங்களுக்கும் தனித் தனியா ரெண்டு தொர இருக்கு,((யோய் ஜொள்ளு வாய மூடுயா பொம்பளைங்க தொரை-னு சொன்னாப் போதுமே அப்படியே வாயத் தொறந்துடிவியே)),

கம்மாக் கரயில் ஒரு கோவில் இருக்குது பாருங்க அது பிள்ளையார் கோவில்,(கோவில்னதும் "குமரனை" நினைத்து பாட்டு பாடனும்னு யாரும் "எஸ்கே"ப் ஆயிடாதீங்க ஊரச் சுத்திப் பார்த்ததும் அப்புறம் இங்க வரலாம்)

நொட்டங்கைப் பக்கம் இருக்குது பாருங்க கருவக் காடு அதானுங்க நாங்க ஒதுங்குற எடம்,
சரி இப்போ ஊருக்குல்லாற போவோம் அப்புறம் ஊர் சுத்தி முடிச்சிட்டு அடுத்த எல்லைப் பத்தி போசுவோம் சரியா..?

சரி வாங்க உங்க கை புடிச்சி எங்க ஊருல உள்ளவுக வீட்டுக்கெல்லம் கூட்டிட்டு போறேன்,வடக்குத்தெரு, நடுத்தெரு, தெக்குத்தெருனு 3 தெரு இருக்கு,மொதல்ல வடக்குத் தெருல இருந்து போவோம், ,ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பட்டப் பேரு இருக்கு,


வடக்குத் தெரு வாலிபர்களைப் பார்ப்போம்...

பப்பூன் மாமா வீடு
கட்டப் பஞ்ஜாயத்து மாமா வீடு
சோவி வீடு*
கூலயன் வீடு
கொச வீட்டு பாலமுருகன் வீடு(குயவர் வீடு)
வைத்தியம்பிள்ளை வீடு
பாக்கியம்பிள்ளை வீடு
கொட்டைக்கார்ரு வீடு(கொட்டகை வீடு)
ஆசாரி வீடு
மீன்கார கலாஅக்கா வீடு
உள்ளாக்கு வீடு
பார்வகார்ரூ வீடு(வேப்பிள்ளையால் மந்திரித்து "பார்வை" பார்ப்பவர்)
காக்காயன் வீடு
வெரச்சூம்பி வீடு
சைக்கிள்கட நாடார் வீடு
வழிமரச்சான் கலப்புக் கட(எங்க ஊருல இருக்குற "பெரிய"டீ-க்கட)
பூச்சாண்டி வீடு
பல்லு வீரையா வீடு

*சோவி வீடு- தானுங்க நம்ம வீடு(இதப் பாத்துட்டு ஏதோ "சோவி"யத்துக்கும் எங்களுக்கும் தொடர்புனு நெனைச்சுடாதீங்க, முன்னோர்கள் சோவிமுத்து வச்சி விளையாடுவாங்களாம் அதான்)



அடுத்தாப்புல நடுத்தெரு நட்டாமுட்டீங்க பத்தி...

தலைவரு குருசாமி வீடு
கோணக்கழுத்து வீடு
வெறுகு வீடு
சண்டரிச்சா வீடு
கொசவீட்டு போஸ் வீடு
மூலிக்காலி வீடு
வண்ணவீட்டு கணேசன் வீடு

கடைசில தெற்குத்தெரு மச்சாங்க வீடு

கடைகார கூரி அண்ணன் வீடு
சேன வீடு
மொண்டாசு வீடு
தொட்டுநக்கி வீடு
கரம்ப வீடு
வாத்து வீடு
அழகர் வீடு
மசங்கி வீடு
மாக்கான் வீடு
கோடாங்கி வீடு
குச்சிக்காலு வீடு
குலும வீடு
மூக்கன் வீடு
மண்ணுவீடு
எலியன் வீடு
வடிவேல் வீடு

(கோடாங்கி வீட்டுல முத்துப் போட்டு க.பி.க எல்லாரும் எப்பக் கல்யாணம்னு தெரிஞ்சிக்கலாம், அப்படியே வேறு பெயர்களில் எழுதும் வலைப் பதிவர்கள் பற்றிய உங்களின் சந்தேகத்தையும் கேட்டுக்கறலாம்.)

ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லாம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,

சரி தெருவெல்லாஞ் சுத்தியாச்சா வாங்க ரோட்ல இருக்குற கடகார கூரி அண்ணே கடயில் கலரு குடிப்போம்(உங்க "மனதின் ஓசை" 24% பூச்சி மருந்துனு சொல்லுதா, அதெல்லாம் ஒங்க டவுனு கலருலதாம்பூ, இதுநம்ம காளிமார்க், இங்கின இதுதேன் கெடைக்கும், இதத்தேன் நான்கலும் வருச முச்சூடும் குடிக்கிறேன்,) கடய ஒட்டுனாப்புல நாலஞ்சு ஆளுக்க படுத்துருக்ககா பாருங்க இதுதேன் "சங்கம்", இங்கதேன் பஞ்சாயத்துப் பூராம் நடக்கும்.(பஞ்சாயத்து நடக்குறதே பெரிய காமெடியா இருக்கும்)

இப்போ ஊரோட அடுத்த எல்லக்கு வந்தாச்சுப்பூ...அந்தா தெரியுது பாருங்க கட்டடம் அது பால்வாடி(எங்க ஊர் LKG,UGK) அதுக்குப் பக்கதுல இருக்கு பாருங்க பெரிய கட்டடம் அதுதேன் பள்ளிக்கூடம்(ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), இன்கென தேன்ம்ப்பூ நா 5 ஆப்பு(ஆஹா.. இன்கேயும் ஆப்பா?) வரைக்கும் படிச்சேன்,


எங்கவூர்ல நீங்க படிச்ச மாறி இங்கிலீசு பள்ளிகொடம்லா இல்லப்பூ,இப்போதேன் சின்னப் புள்ளக் குட்டிக பூராம் ஆட்டோல போய் "புதுடவுனு" சத்தரக்குடில இங்கிலீசு படிக்கிதுக,

சரி பள்ளிக்கூடத்துலக்கும் கெழக்கால அந்தா தெரியுது பாருங்க அது கருசூரணி (இந்த ஊரணி பற்றிய ஒரு பதிவு இன்னும் டெவலப் பண்ணாம "save as Draft"ல இருக்கு)அப்படியே கொஞ்சம் தள்ளிப் பாருங்க பன மரம் தெரியுதா...

சரி பொம்பளைக எல்லோரும் அப்படியே வீட்டுக்குப் போங்க (பாத்துப் போங்க போர வழில கருவ முள்ளூம்,ஒட மரத்து முள்ளூம் இருக்கும்)நாங்க அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,(கவிதாக்கா இந்த அணீலையும் கூட்டிடு போக்கா)

சரி இப்போ எல்லாரும் வீட்டுக்கு வந்தாச்சா, வாங்க, அம்மா கத்தரிவத்தல் புளிக்கொழம்பு வச்சிருக்காங்க,எல்லோரும் சாப்புடுவோம்,

சாப்டாச்சுல எல்லாரும் அப்படியே திண்ணைல கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காந்து பேசுவோம்,கிராமங்களின் சிறப்பே ஒற்றுமையாக கொண்டாடப்படும் விழாக்கள் தான்,மாரியம்மன் கோவில் மொழக்கட்டு,கிருஷ்ண ஜெயந்தி-மஞ்சத்தண்ணி,மாவிடியான் கோயில் திருவிழா, மடக்கிரயான் கோயில்,அய்யனார் கோயில் குருதஎடுப்பு, காளி கோயில் கலியாட்டம்னு நெரய அயிட்டம் இருக்குப்பூ, அதுலயும் ஒவ்வோரு விழாவுக்கும் நாடகம் வேற நடக்கும்,அதுல வர பப்பூன் காமிக்கு,பா(வை)வக்கூத்து அடாடா...
அதெல்லாம் "உண்மையாகவே"வாழ்ந்த காலங்கள்...

கம்மா அழியும் போது மீன் புடிக்க ஊர் சனங்க பூராம் கச்சாவ(யோஹன் உங்க ஊர்ல "கச்சாவுக்கு"என்ன பேருனு ஒரு ஆராய்ச்சிப் பதிவு ரெடி பண்ணுங்க) தூக்கிகிட்டு ஓடிவந்து ஒன்னா கூடுவாக,அதப் பாக்க அப்படியே திருவிழாக் கூட்டம் மாதிரித்தேன் இருக்கும், அதே மாதிரி கிராமத்து வெளையாட்டும் கிளித்தட்டு,ஒழிஞ்சிபிடிச்சு,போந்தா(பளிங்கி),கிட்டி,கல்லா மண்ணா அப்படினு அது ஒரு லிஸ்ட் இருக்கு, இதப் பத்தியும் தனிப் பதிவு உண்டு,


ஊரச் சுத்தி காமிச்சாச்சு,மணி 5:00 ஆச்சு அருப்புக் கோட்டையில இருந்து ரத்தினா(எங்க ஊருக்கு வரும் ஒரே தனியார் பேருந்து)வரும் அதுல போய்டுவோம் அப்படி இல்லைனா 6:30க்கு வர்ர 9C-ல போயிடலாம்,

அந்தா ரத்தினா வந்திடுச்சு கெளம்புவோமா...

என் கிராமத்திற்க்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு அழைத்து சென்றேன், நான் எழுதிய பதிவுகளில் இதுவே மிகவும் திருப்தியான பதிவாக கருதுகிறேன், இனி அடிக்கடி "இதுபோல்" திருப்தியடைய எண்ணியுள்ளேன்.
என் எழுத்து நடையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், அது இனி வரும் என் எழுத்துக்களை திருத்த உதவும்,
சரி எங்க ஊருக்கு வந்தீகளே எப்படி இருந்துச்சு கொஞ்சம் சொல்லிட்டு போங்க நணபர்களே...


(படங்கள் :- கூகுளாண்டவர் துணை)


அன்புடன்...
சரவணன்.

Saturday, August 05, 2006

சோனியா அகர்வாலும்-சரவணா ஸ்டோர்ஸும்


போலீஸ்க்கார்: ஏண்டா "சரவணா" ஸ்டோர்ஸ்ல திருடுன...?

திருடன்: சோனியா அகர்வால் தான் சார் சொல்லுச்சு

போலீஸ்க்கார்: என்ன சொல்லுச்சு..?

திருடன்:எடுத்துக்கோ.... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோனு,


அன்புடன்...
சரவணன்.

நாங்களும் படம் போடுவோம்ல...

வலைப்பக்கங்கள்ள இப்போ எங்க பார்த்தாலும் படம் போடுறேன் பேர்வழினூ தொப்பி ஒன்ன போட்டுகிட்டு "ஓணாண்டி படம்" புடிக்கிற நம்ம கைப்பு, அப்புறம் "படகு"புகழ் பொன்ஸ்-னு கெளம்பிடுறாக சரி நம்மளும் எதாவது படம் போடலாம்னு பார்த்தா அப்புறந்தேன் தெரியுது அதுக்கு கேமரா பொட்டி வேனுமாமுல அதுக்கு எங்கிட்டு போறது, அதான் நமக்கு வந்த பழய மெயில்ல இருந்து ஒரு 2 படத்த போடுவமேனு இந்தப் பதிவு,


1, என்னைய யாருமே "ஆறு" போட கூப்பிடலை, ஹி..ஹி..ஹி அதான் நானாவே போட்டுகிட்டேன்.




2, மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்கும் போது கைப்பூ படிச்ச படிப்ப நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்,









3,இந்த மாச அட்லூசு ராசாத் தம்பி கணக்கு பரிசைக்கு போச்சு இன்னும் வரலை, யாராவது பார்த்தீங்களா...?






அன்புடன்...
சரவணன்.

Sunday, July 30, 2006

தெரிந்தால் சொல்லுங்களேன்...

நண்பர்களே... எனக்கு ஒரு பழைய்ய்ய்ய்ய்ய்ய பாடல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்தவர்கள் உதவுங்கள்...
அந்தப் பாடல் தொகுப்பின் தலைப்பு,மற்றும் அதன் ஆசிரியர் யார் என்ற தகவல்கள் எனக்கு தெரியாது(ஆஹா.. காதலிக்கும் நாயகியின் பெயர்,ஊர் தெரியாமல் தேடுகின்ற நாயகன் கதை மாதிரில இருக்கு!!!)
ஆனால் அந்த பாடலின் சில கருத்துக்கள் மட்டும் குத்துமதிப்பாக நினைவில் உள்ளன,அது என்ன வென்றால்....

அந்த பாடலின் ஆசிரியர் மனிதனின் நீண்ட ஆயுளுக்கு ஒரு கணக்கு சொல்லி இருப்பார்,
அதாவது

வாரத்திற்க்கோ (அ) மாதத்திற்க்கோ இருமுறை தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்,(மற்ற நாட்களில் குளிக்க வேண்டாமா??)

வாரம் ஒருமுறை உறவு கொள்ள வேண்டும்,(கண்டிப்பாக திருமணமானவர்கள் மட்டும்),

ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையோ. அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையோ பேதிக்கு(வயிற்றுப் போக்கு)மருந்து சாப்பிட வேண்டும்,

என்று படித்ததாக நியாபகம்,ஆனால் கணக்கு எனக்கு சரியாக தெரியவில்லை,இதைப்பற்றி உங்களுக்கும் நியாபகம் இருந்தால் சொல்லவும் , அல்லது முழுதும் தெரிந்தால் பாடலுடன் கூடிய விளக்கத்துடன் தெரிவிக்கவும்,

எனது இந்த பதிவு உடல் நலம் பற்றியது (மருத்துவர்கள் கவனிக்க...)
அதுவும் பழைய பாடல் (பாடத்தெரிந்த புலவர்கள் கவனிக்க...)

நன்றி..



அன்புடன்...
சரவணன்.

Monday, July 24, 2006

கை விட்டு விடவில்லை தோழா-வழி தெரியாமல் விழிக்கின்றோம்

தமிழினி அவர்கள் "நீங்களும் கைவிட்டு விட்டீரோ!! என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார்

இதற்க்கு திரு.மணியன் அவர்கள்,

//ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் // என்று பின்னூட்டமிட்டிருந்தார்,

இது தான் என் போன்றவர்களின் நிலைமையும்,ஒவ்வொருமுறையும் ஈழத்தைப் பற்றி படிக்கும் போதும் நெஞ்சு வலிக்கின்றது, மனது கணக்கின்றது.நினைத்தால் கண்ணீர் வருகிறது

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஈழத்தை வேறு நாடு,அன்னிய பூமியாக நான்(நாங்கள்)கருதவில்லை,
அது எனது ஊர், அங்கு இருப்பவர்கள் என் சகோதரனும், சகோதரியும்,என் பெரியப்பா, சித்தப்பா, போன்ற உறவினர்களே என்ற எண்ணம் தான் உள்ளது.

சில சமயங்களில் ஈழத்து நண்பர்கள் சிலரின் பதிவுகளில் ஏதோ நாங்கள் (தமிழகத்தில்) பெருப்பில்லாமலும்,அவர்களைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருப்பதாக நினைக்கின்றனர், இதை நான் குறை சொல்லவில்லை. இது அவர்களின் வருத்தம் அவர்களுக்கு உரிமை உண்டு எங்களிடம் வருத்தப்படாமல் கன்னடர்களிடமோ, இல்லை ஆந்திராக்காரனிடமோ வருத்தப்பட முடியாது, ஏனென்றால் நாமெல்லாம் ஒரே இனம் தமிழ் நம்மை இணைக்கிறது.நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழி தெரியவில்லை என்பது மட்டும் உண்மை.

கமலஹாசன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் சொன்னார், தமிழகம் இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளதால் எங்களுக்கு இராணுவத்தின் செயல்கள் பெரியதாக தெரியவில்லை, எல்லைச் சண்டையின் வெப்பம் எங்களைத் தாக்கவில்லை, ஒருவேளை இதனால் தான் தமிழன் இராணுவத்திற்க்கு மரியாதை செலுத்த தயங்குகிறான் என்று வருத்தப் பட்டார்,

இலங்கையின் போர் வெப்பம் தாக்கவில்லையென்று காஷ்மீரி சொல்லலாம், ஆனால் எந்த ஒரு தமிழனும் அதன் பாதிப்பில்லாமல் இருக்க இயலாது, ஏனென்றால் மறுபடியும் சொல்லுகின்றேன், ஈழத்தில் இறப்பது எமது சகோதரர்களும் , என் வீட்டுப் பெண்களுமே,

என் ஆதரவு புலிகளுக்கா என்றால் "தெரியாது" என்று தான் சொல்லுவேன், ஏனென்றால் அரசாங்க காரியங்கள் ஒரு கடல், எனக்கு தெரிந்தவை ஒரு துளி மட்டுமே, ஆனால் என் ஆதரவும் , என் பிரார்த்தனையும் என் அருமை ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு நிச்சயமாக உண்டு என்று சத்தமாக என்னால் சொல்ல இயலும்,

கணிப்பொறித்துறையில் பணியாற்றுகின்ற ஒரு சாதாரண இந்திய பிரஜை நான், என்னால் என்ன செய்துவிட முடியும் என்று சப்பைக் கட்டு கட்டவில்லை, வழி தெரியவில்லை அது தான் உண்மை
நம்புங்கள் நண்பர்களே .. தமிழகத்தில் பலருடைய நிலைமையும் இதுதான்...
என்றும் எங்களின் ஆதரவும், பிரார்த்தனையும் எங்கள் சகோதரர்களுக்கு உண்டு.

இந்தப்பதிவு சரவணன் என்ற தனிப்பட்ட மனிதனின் கருத்து
இதற்க்கு நீங்கள் ஒத்துப்போகலாம், இல்லை சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்படு இல்லாமல் போகலாம், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை,
இதைப் பற்றி விவாத்திப்பதற்க்காக இந்த பதிவை போடவில்லை, என் கருத்தை தெரிவிக்கவே இந்தப் பதிவு.எனவே தயவுசெய்து இதைப் பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம்.

இந்தப் பதிவை எதிர்த்து தயவுசெய்து யாரும் எதிர்பின்னூட்டம் இட வேண்டாம், அப்படி இட்டாலும் மன்னிக்கவும் அதை நான் வெளியிடமாட்டேன்,



மீண்டும் சொல்கிறோம்..
ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கின்(றேன்)றோம்...கனத்த இதயத்துடன் முடிக்கின்றேன்.






அன்புடன்...
சரவணன்.

Sunday, July 23, 2006

51அடி ஆழ கிணற்றில் 5-வயது சிறுவன்

மாலை 6:30 மணி : அரியானா மாநிலம் ஷாகாபாத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரின்ஸ், எதிர்பாராத விதமாக அங்கிருந்த 51 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

இதையடுத்து கிராமமே பதறிப் போனது. போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினரும் தகவல் தரப்பட்டு அனைவரும் விரைந்து வந்தனர்.முதல் கட்டமாக சிறுவன் மயக்கமடந்து விடக் கூடாது என்பதற்க்காக கிணற்றுக்குள் ஆக்சிசன் அனுப்பப்பட்டது,

சிறுவனை மீட்க்க அவர்கள் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கினர்.சிறுவன் விழுந்துள்ள கிணற்றுக்கு அருகே பெரிய குழி தோண்டி அதன் வழியே பிரின்ஸை மீட்க திட்டமிடப்பட்டது. அந்தப் பணியை தொடங்கிய ராணுவ வீரர்கள், இன்னொரு புறம், குழுக்குள் சிறுவனின் நிலைமையை அறிவதற்க்காக அதி நவீன கேமராவை உள்ளே அனுப்பினர். அந்த கேமராவை தொலைக்காட்சி ஒன்றுடன் இணைத்தனர்.

இதன் மூலம் குழிக்குள் உள்ள சிறுவன் நலமுடன் இருப்பது தெரிய வந்தது. தைரியமாக இருக்குமாறும்,பயப்படாமல் இருக்குமாறும் சிறுவனுக்கு மேலிருந்து தகவல் கொடுத்த ராணுவத்தினர்,சிறுவனுக்கு பிஸ்கட் மற்றும் டீ-யை கயிற்றில் மூலம் உள்ளே அனுப்பினர்.அதைப் பெற்றுக் கொண்ட பிரின்ஸ் அவ்ற்றை சாப்பிட்டான்.

சிறுவன் குழிக்குள் விழுந்து இன்று காலை 9 மணியுடன் 39 மணி நேரம் முடிவடைந்துள்ளது. இதனால் விரவாக அவனை மீட்கும் முயற்ச்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

முற்பகல் 11:30 : மும்பையிலிருந்து மீட்புப் பணியில் சிறந்த நிபுணர் படை ஷாகாபாத் விரைந்தது.9 போர் கொண்ட இந்த வீரர்கள் , மும்பை தீயணைப்புப் படையில் இடம் பொற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் சுரங்கம் மற்றும் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.


பிரின்ஸ் நலமுடன் பத்திரமாக மேலே வருவதைக் காண நாடு முழுவதும் தீவிரப் பிரார்த்தனை நடந்து வருகின்றது.அவர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.





அன்புடன்...
சரவணன்

Saturday, July 22, 2006

வ.வா.சங்கத்திலிருந்து அறிக்கை - இது ஓர் எச்சரிக்கை.

இன்று இலவச கொத்தனார் நமது தல கைப்பிள்ளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்,
தல இப்போழுது கானா(???) நாட்டில் மாமியார் வீட்டிற்க்கு சென்றுவிட்டு அப்படியே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்,வந்ததும் இதற்க்கான மறுப்புஅறிக்கை விடப்படும் இருந்தாலும் அவருடைய சங்கத்தின் சார்பாக புதிய உறுப்பினர் என்ற முறையில் என் கண்டன அறிக்கையை வெளியிடுகிறேன்.(வேகமா உறுப்பினர் அட்டையை வழங்குங்கப்பா..
இது வேற அப்புறம் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கலைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கிடப் போறாங்க..)


லகுட பாண்டிகளே....
எங்கள் "இனமானதலை" மீதா நம்பிக்கை இல்லாத்தீர்மானமும் ஓட்டெடுப்பும்...
அய்யகோ... நெஞ்சு பொருக்குதில்லையே....

தலை இதுக்கெல்லாம் நீ வந்து பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை..
இருந்தாலும் ஒரு கெத்துக்கு நீ வந்து ஒரு சலம்பல் பண்ணீட்டு போ...தலை,

எதிரிகளின் விஷமச் செயல் எங்களை ஒன்றும் செய்யாது என்பதை இங்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருகின்றேன், ஓயாது இந்த அலை,காயாது இந்த சிலை,உங்களின் பொய் பிரச்சாரத்திற்கு மசியாது எங்கள் தலை..(ஆஹா கவித கவித..)


யார் யாரெல்லாம் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்களோ, பின்னூட்டமிடுகிறர்களோஅவர்களை பற்றிய தகவல்கள் புலனாய்வுத்துறையினரால் ரகசியமாக கைப்பிள்ளையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்படும், எனவே யாரும் எங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம், மீறுபவர்கள் டரியல் ஆகிவிடுவீர்கள்.
சரி நான் கெளம்புறேன்.. பின்னூட்டமிடுங்க அங்க மீட் பன்னுவோம்


யார் அங்கே.. யார் அங்கே.. அடே யாரடா அங்கே..

அடடா இப்படி தலை... பற்றிய தலைப்புல(ஆஹா..) எழுத படிக்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு, இதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் சாதி இல்லையென்றால் அரசியல் இப்போ புதுசா கடவுள் வேற...அட போங்கப்பா...



அன்புடன்...
சரவணன்.

BLOGGER-தடை நீக்கம்.

இண்டர்நெட்டில் கருத்துக்களை எழுதும் வலைப்பதிவர்கள், பொதுநலத்தில் அக்கரை கொண்டவர்கள்(???), கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திர ஆதரவாளர்கள் முயற்சியால், வலைப்பதிவுகளுக்கான தடை உத்தரவை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்ப்பட்டது.இதனால்,நேற்று இரவு முதல் பிளாக்குகள் செயல்பட தொடங்கின.வலைப்பதிவுகளுக்கு விதிக்கபட்ட தடை ஒரு தொழில்நுட்பத் தவறு என்று தொலைதொடர்பு அமைச்சகத் தகவல்கள் கூறுகின்றன.ஒரு சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை தடைசெய்தோம். அது எல்லா வலைப்பதிவுகளையும் தடை செய்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.(நமது தகவல்தொழில்நுட்பத்தை அசிங்கப்படுத்த வெளியில இருந்து ஆள் வரவேண்டியதில்லை.. நமது அரசாங்கமே போதும்)வலைப் பதிவுகளை தடை செய்ய மத்திய அரசு வாய்மொழி உத்தரவிட்டது என்று டில்லி மற்றும் பெங்களூர் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.


(நன்றி.. தினமலர்-22/07/2006)


அதான் தடை நீக்கியாச்சுல்ல அப்புறம் என்ன யோசனை.... எழுத ஆரம்பிச்சுட வேண்டியது தானே...

அன்புடன்...
சரவணன்.

Friday, July 07, 2006

கடவுளும்....கமலஹாசனும்....,

வலைப்பதிவுகளில் இப்பொழுதெல்லாம் அதிகமாக "கடவுள்" பெயர் அடிபடுகிறது,
கடவுளை பற்றீ நமது நாத்திகர்"கமலஹாசன்"வசூல்ராஜா MBBS படத்துல
சொல்லுவாரு

"கடவுள் இருக்காருனு சொல்லுறான் பாரு அவனை நம்பலாம்,
கடவுள் இல்லைனு சொல்லுறான் பாரு அவனையும் நம்பலாம்,
ஆனா நான்தான் கடவுள் அப்படினு சொல்லுறான் பாரு அவனை மட்டும் நம்பகூடாது"

அதே போல் "அன்பே சிவம்" படத்திலும்
மாதவனுக்கும் கமலஹாசனுக்கும் நடக்கும் கடவுளை பற்றிய விவாத்ததின் போது கடவுள் என்றால் யார்? என்ற கேள்விக்கு கமல் சொல்லுவார்"அன்புதான் கடவுள்"
"சக மனிதன் மீது காட்டப்படும் அன்பே கடவுள்" என்று
எனவே சக மனிதன் மீது அன்பு காட்டிய அனைத்து வலைப்பதிவு நண்பர்களும் கடவுள்களே..
எனவே என் சக கடவுள்களே...
இனிமேலாவது கண்ணகி, ஐய்யப்பன்,ஜெயமாலா,மீரா ஜாஸ்மின் ஆகியோரை விட்டுவிடுங்கள் பாவம் அவர்கள்,
உங்கள் அருகில் இருக்கும் சக மனிதனை நேசியுங்கள், அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்..(ஹி, ஹி,ஹி கொஞ்சம் ஓவரா தான் ADVISE பண்ணீட்டனோ....)
இப்படிக்கு,

உங்கள் சக கடவுள்,




அன்புடன்...
சரவணன்.

Monday, July 03, 2006

இந்திய சுதந்திரமும்,வெளிவராத ரகசியமும்

Thursday, June 22, 2006

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை.--சேனாதிராசா





(விகடனில் வெளிவந்திருக்கும் இச்செய்தியை தமிழினி தட்டச்சு இட்டதனை இங்கு மறுபதிப்பு செய்துள்ளேன். விகடனுக்கும்,தமிழினிக்கும் நன்றி. )

ஒவ்வொரு ஈழத்தமிழர் வீட்டு வாசலிலும் மரணம் காத்திருக்கிறது. அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஈவிரக்கமின்றிப் புகுந்து கொலை செய்கிறது சிங்கள இராணுவம். அந்தத் துப்பாக்கிகளைப் போலவே அவற்றை ஏந்தியிருக்கிற மனிதர்களும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமல்போனால் 7 வயதுக்குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்ய யாருக்காவது மனம் வருமா? இலங்கையில் அமைதி திரும்ப இன்னும் இப்படி எத்தனைகுழந்தைகளை நரபலி கேட்கப்போகிறார்களோ?சேனாதிராசா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரம் ததும்புகிறது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவருமான சேனாதிராசா தமிழகம் வந்திருந்தார். போர்ச்சூழலின் காரணமாக அகதிகளாகத் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான முன்னேற்பாடுகளுக்காக முகாமிட்டிருந்தவரைச் சந்தித்தோம்.


கே:மீண்டும் அதிக அளவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம்பெயரத் தொடங்கியிருக்கிறார்களே?

ப: 50 ஆண்டுகாலப் போராட்டத்துக்கான தீர்வு இன்னும் எம்மக்களுக்குக் கிடைக்கவில்லை. செழித்து வளர்கிற பூமி எங்களுடையது. விருந்தினர்களாக எங்கள் வீடுகளுக்கு வருபவர்களை வயிறு நிறைய, மனம் நிறைய உபசரித்து அனுப்புவோம். இன்று, ஏர் உழுத தடம் மாறி, பூட்ஸ்களின் தடங்களைச் சுமந்தபடி கேட்பாரற்றுக் கிடக்கின்றன எங்கள் வயல்கள். எம்மக்கள் ஒருவேளைச் சோற்றுக்கும் வழியின்றித் தஞ்சம் தேடி அகதிகளாகின்றனர். இதுவரை 30 000 பேருக்கும் அதிகமான மக்கள்புலம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் சில ஆயிரம் பேர் மட்டும்தான் உயிருடன் வந்துசேர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே என்று கவலைப்படுவதா? அல்லது இங்கே வந்து அகதிகள் என்ற பெயரில் அனாதைகளாகின்ற மக்களுக்காக அக்கறை கொள்வதா? மக்களைக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைக்கிற புதைகுழிகளைப் பற்றி இனி செய்திகள் நிறைய வரலாம். "செம்மணி" புதைகுழியைப் போல இப்போது "கோப்பாய்" புதைகுழியில் அழுகிய நிலையில் பலபிணங்களை எடுத்திருக்கிறார்கள். அவை வெகு சமீபமாகக் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் உடல்களாகத்தான் இருக்கும்.கடந்தவாரம்கூட மன்னார் மாவட்டம் வங்காலை என்னுமிடத்தில் ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திருக்கிறார்கள். கணவன், மனைவியுடன் அவர்களின் 7 வயது மகனையும், 9 வயது மகளையும் கொன்று போட்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் எதிரிலேயே அந்தத்தாய் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படி இரத்தம் உறையவைக்கும் இத்தகைய செய்திகளை இன்னும் எவ்வளவு கேட்க வேண்டியிருக்குமோ?


கே:சிங்களர் - தமிழர் இணைந்து கூட்டாட்சி அமைக்கிற வாய்ப்பே இனி இல்லையா?
ப: இலங்கைத் தமிழர்களிடம் இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஐந்து வீடுகளைக்கூட பாண்டவர்களுக்குத் தரமுடியாது என்று சொன்ன கௌரவர்களைப்போல் இலங்கைத் தமிழ் மக்களை வஞ்சித்துள்ளது இலங்கை அரசு. இருதரப்புக்குமான நல்ல முடிவுகளை இனி அது எடுக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. இனிமேல் தனிநாடுதான் எங்களுக்கான ஒரே தீர்வு. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதுபோல் இலங்கையிடமிருந்து தமிழ்மக்கள் சுதந்திரம்வேண்டிப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


கே:பாரம்பரியம் மிக்க உங்கள் அரசியல் கட்சி புலிகளின் தலைமையை ஏற்றுக்கொள்ளுமா?
ப: எங்களுக்குத் தேவை விடுதலை. அதைத் தனித்தனியாக நின்று பெறமுடியாது. 2002 ஆம் ஆண்டு தேர்தலில் "விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடுவோம், வாக்களியுங்கள்" என்று கேட்ட எங்கள் கட்சிக்குப் பெரும் வெற்றியைத் தந்து இணைந்து போராடும்படி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் மக்கள்.


கே: போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த மீட்புப்பணியும் நடைபெறாத சூழலில் போர் தேவையா?
ப: போர் தேவை என்று எந்த நாகரிகச் சமுகமும் சொல்லாது. அதிலும் இரண்டு தலைமுறைகளை யுத்தத்தால் தொலைத்த ஈழம் போரை எப்படி விரும்பும்? ஆனால் போர் எங்கள்மீது திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஆயுதம் தரிப்பது யாரையும் தாக்குவதற்காக அல்ல, தற்காத்துக்கொள்ளவே! போரில்லாமல் தீர்வு கிடைத்தால் எங்களைவிட யாரும் அதிகம் மகிழமுடியாது.


கே: ஏன் அரசின்மீது கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள்?
ப:உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித உத்தரவாதமுமின்றி அகதியாக ஒருநாளேனும் வாழ்ந்துபாருங்கள்! எங்கள் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும்!


அன்புடன்...
சரவணன்.

Friday, June 16, 2006

அவளின் ஆதிக்கம்


என்ன உடை உடுத்தவேண்டும்,
என்ன பேச வேண்டும்
என ஆரம்பித்து என்னுடைய
ஒவ்வொரு நாளையும் தீர்மானிப்பது
என்னுள் இருக்கும்
அவளுடைய எண்ணங்கள்...


அன்புடன்...
சரவணன்.

Thursday, June 15, 2006

விளக்கம் கொடுக்கவும்

அன்புள்ள நண்பர்களே...
என் பதிவு மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் வருவதில்லை.
நானும் பல முறை படிச்சு பாத்துட்டேன் .ஒண்ணும் புரியலே.
யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.



அன்புடன்...
சரவணன்.

Tuesday, June 13, 2006

அழகான ராட்சஷி


ஒரு கார்த்திகை இரவில் அகல்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு - உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.
(நன்றி...தபு.சங்கர்)



அன்புடன்...
சரவணன்.

Monday, June 12, 2006

பாரதியின் அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்.


அன்புடன்...
சரவணன்.

Friday, June 09, 2006

பெங்களூரில் கைப்புள்ள.........

நாம் பாட்டுக்கு சென்னையில செவனென்னு பெஞ்சுல ஒக்காந்திருந்தேன்... திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு Project இருக்கு சேர்ந்துகிறியானு கேட்டான்.நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு...அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்.. அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு... ஒரு volvo bus-ல ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க.. நானும் வெயில் காலத்துல குளு குளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்ம்பி... பெங்களூருக்கு வந்துட்டேன்...இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா... எல்லாப் பயலுகளும் மூச்சு தெணற தெணற வெலை செய்யறானுங்க..outlook um orkuttum மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசாஇருக்கு... என்னொட PL வெற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-சையும் எங்கிட்ட தள்ளி விட்டாரு... நானும் எவ்வளவு நேரம் தான் code எழுதுற மாதிரியே நடிக்கிறது?
(உங்களால முடியலைனு சொல்ல வேண்டியது தானே?)

நான் எப்பவும் வேலை செய்யாம மெயில் பண்ணிகிட்டே இருக்கிறதை பர்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணிகிட்டே இருக்கான் இவன் ரெம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



அன்புடன்...
சரவணன்.

Tuesday, June 06, 2006

உன்னை நினைவுபடுத்துபவை


அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன.உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன...
(நன்றி... தபு.சங்கர்)


அன்புடன்...
சரவணன்.

Sunday, June 04, 2006

ஆனாலும் மகிழ்ச்சி...




அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம்....
ஆனாலும் மகிழ்ச்சி....
அவள் வாயிலிருந்து எனது பெயர்...


அன்புடன்...
சரவணன்.

Saturday, June 03, 2006

கண்ணாடியின் ஏக்கம்....



அனைவரும் உன்னை பார்த்து
அலங்கரிக்கும் போது
நீ மட்டும் காத்திருக்கிறாய்
அவள் வருகைக்காக.....
உன்னை அலங்கரித்துக் கொள்ள....


அன்புடன்...
சரவணன்.

Friday, June 02, 2006

அப்பாவின் நம்பிக்கை...



அடர்ந்த இரவின் நடுவே
அனைவரும் உறங்கியபின்...
வெகு நேரம் விழித்திருந்து
யாரும் அறியாவண்ணம்
உன்னிடம் தொலைபேசுவதில்
கரைவது என் BALANCE மட்டுமல்ல
என் தந்தையின் நம்பிக்கையும் தான்....

Thursday, June 01, 2006

முத்தமிட்ட கை....


நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரெம்பவும்
அவஸ்தைப்படுகிறென்.எதையுமே தொட
மறுக்கிறது கை.'அப்படியெ புதுசாக
வைத்துக் கொள்; சின்ன குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள்..." என்கிறது அந்தக் கை.

(நன்றி.. தபு.சங்கர்)


அன்புடன்...
சரவணன்.

பேச ஆசை...




உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைபடுகிறனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.........

(நன்றி... தபு.சங்கர்)

அன்புடன்...

சரவணன்

Thursday, May 25, 2006

ஸ்பெயினில் ரஜினி-சிவாஜி STILLS







Wednesday, May 24, 2006

என்ன தருவாய்.....?

எதை கேட்டாலும் வெட்க்கத்தை தருகிறாய்....
வெட்க்கத்தை கேட்டால் என்ன தருவாய்....
(நன்றி..... தபு.சங்கர்)



அன்புடன்....
சரவணன்

Sunday, May 21, 2006

காதலின் வலி



அவள் இறந்திருந்தால்
நான் இருந்திருபேன்....
அவள் இருப்பதினால்
நான் இறக்கின்றேன்......


அன்புடன்....
சரவணன்

Saturday, May 20, 2006

எனது முதல் பதிவு



வணக்கம் நண்பர்களே.....
எனது முதல் பதிவை
பார்வையிட்டதர்க்கு மிக்க நன்றி
தொடர்ந்து பதிவிட வாழ்த்துங்கள்


அன்புடன்....
சரவணன்