Saturday, July 22, 2006

வ.வா.சங்கத்திலிருந்து அறிக்கை - இது ஓர் எச்சரிக்கை.

இன்று இலவச கொத்தனார் நமது தல கைப்பிள்ளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்,
தல இப்போழுது கானா(???) நாட்டில் மாமியார் வீட்டிற்க்கு சென்றுவிட்டு அப்படியே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்,வந்ததும் இதற்க்கான மறுப்புஅறிக்கை விடப்படும் இருந்தாலும் அவருடைய சங்கத்தின் சார்பாக புதிய உறுப்பினர் என்ற முறையில் என் கண்டன அறிக்கையை வெளியிடுகிறேன்.(வேகமா உறுப்பினர் அட்டையை வழங்குங்கப்பா..
இது வேற அப்புறம் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கலைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கிடப் போறாங்க..)


லகுட பாண்டிகளே....
எங்கள் "இனமானதலை" மீதா நம்பிக்கை இல்லாத்தீர்மானமும் ஓட்டெடுப்பும்...
அய்யகோ... நெஞ்சு பொருக்குதில்லையே....

தலை இதுக்கெல்லாம் நீ வந்து பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை..
இருந்தாலும் ஒரு கெத்துக்கு நீ வந்து ஒரு சலம்பல் பண்ணீட்டு போ...தலை,

எதிரிகளின் விஷமச் செயல் எங்களை ஒன்றும் செய்யாது என்பதை இங்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருகின்றேன், ஓயாது இந்த அலை,காயாது இந்த சிலை,உங்களின் பொய் பிரச்சாரத்திற்கு மசியாது எங்கள் தலை..(ஆஹா கவித கவித..)


யார் யாரெல்லாம் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்களோ, பின்னூட்டமிடுகிறர்களோஅவர்களை பற்றிய தகவல்கள் புலனாய்வுத்துறையினரால் ரகசியமாக கைப்பிள்ளையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்படும், எனவே யாரும் எங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம், மீறுபவர்கள் டரியல் ஆகிவிடுவீர்கள்.
சரி நான் கெளம்புறேன்.. பின்னூட்டமிடுங்க அங்க மீட் பன்னுவோம்


யார் அங்கே.. யார் அங்கே.. அடே யாரடா அங்கே..

அடடா இப்படி தலை... பற்றிய தலைப்புல(ஆஹா..) எழுத படிக்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு, இதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் சாதி இல்லையென்றால் அரசியல் இப்போ புதுசா கடவுள் வேற...அட போங்கப்பா...



அன்புடன்...
சரவணன்.

20 பின்னூட்டங்கள்:-:

said...

நீங்களுமா?!!!

said...

பி.கு.வை வரவேற்கிறேன்!
கண் திறந்தது!

said...

இல்ல பொன்ஸ்...
நானும் பொருத்துப் பொருத்துப் பார்தேன், முடியலை...
வேணாம் விட்டுற்ங்க வலிக்குதுனு சொன்னேன் அப்படியும் விடலை அதான் (ஹிஹிஹி...) பதிவாவே போட்டுடேன்.

அன்புடன்...
சரவணன்.

said...

ஹலோ யாருங்கண்ணா, இங்கன தனி கடை போடுவது.....
இது செல்லாது செல்லாது

said...

SK...
சங்கத்துப்பக்கம் அப்படியே வந்ததற்க்காக நானும் உங்களை வரவேற்கிறேன்.
உங்களின் பல கவிதைகளை(???)
பல பின்னூட்டங்களில் படித்துள்ளேன்,
வாழ்த்துக்கள்,

அன்புடன்...
சரவணன்.

said...

நீங்களுமா?!!!

said...

//பல கவிதைகளை(???)//


இந்தக் கேள்விக்குறிகளுக்கு என்ன பொருள்?
வஞ்சப் புகழ்ச்சியா?!!!!
:))

said...

இந்த உகு போதுமப்பா சரவணா!

said...

//நீங்களுமா?!!! //
இளா...
ஒரு குருப்பாப் தான்யா கெழம்பியிருக்கீக...



அன்புடன்....
சரவணன்.

said...

//இந்தக் கேள்விக்குறிகளுக்கு என்ன பொருள்?
வஞ்சப் புகழ்ச்சியா?!!!!
:))
//


SK...
அந்த கேள்விக்குறி சும்மா தமாசுக்கு போட்டது, ஆனால் உண்மையாகவே
உங்களின் பல கவிதைகளை,கவிதை நடையை ரசித்திருக்கின்றேன்.தொடர்ந்து (கவிதைகள்) எழுதவும்.


அன்புடன்...
சரவணன்.

said...

//இது செல்லாது செல்லாது//
நாகை சிவா.. நீங்க எப்போ இருந்து
நட்டாமை சிவாவா ஆனீங்க?

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு...


அன்புடன்...
சரவணன்.

said...

//நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு..//
சொன்ன தீர்ப்பு சொன்னது தான். எந்த வழக்கா இருந்தாலும் இது தான் தீர்ப்பு.

//அந்த கேள்விக்குறி சும்மா தமாசுக்கு போட்டது, //
கேள்விக்குறிய தமாசுக்கு போட்டு எங்க சங்கத்து அரசவை கவிஞரை கேலி பண்ணுறீயா நீ... உன்ன....

said...

//இந்த உகு போதுமப்பா சரவணா!//

அண்ணன் கொத்ஸ்
என்னதான் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கொத்ஸ்(உட்கட்சி விவகாரம் மாதிரி இது உட்சங்க பூசல்)சொன்னதற்க்கினங்க இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

பின்னூட்டமிடுதலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை

கொத்ஸ்-ன் வேண்டுகோலின் படி உ.கு எதும் இல்லாமல் முடிக்கின்றேன்



அன்புடன்...
சரவணன்.

said...

ஆளாளுக்கு அங்கன இங்கன் போஸ்டர் அடிச்சு ஒட்டி தல பெருமய நல்லாதேன் காப்பாத்தரீக...மாமியார் வீட்ல ஆப்பு கொஞ்சம் பெருசு தல மீண்டு வர கொஞ்ச நாள் ஆகும்... :-)

said...

//ஆளாளுக்கு அங்கன இங்கன் போஸ்டர் அடிச்சு ஒட்டி தல பெருமய நல்லாதேன் காப்பாத்தரீக...//

பின்ன.. தலக்கீனு ஒரு கவுரத இருக்குல்ல...
க.க.க.போ(கருத்தை கச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் போங்கள்)....


//மாமியார் வீட்ல ஆப்பு கொஞ்சம் பெருசு தல மீண்டு வர கொஞ்ச நாள் ஆகும்... //

அஹா... வ.வா.ச- த்திற்க்கு தலைமை ஒற்றனாக உம்மை நியமிக்க
நான் பரிந்துரை செய்கிறேன்.


அன்புடன்...
சரவணன்.

said...

//யார் அங்கே.. யார் அங்கே.. அடே யாரடா அங்கே..//

வணக்கங்கண்ணா!
:)

said...

கைப்புள்ள said...
//வணக்கங்கண்ணா!
:) //

என்னா தல,
உனக்காகத்தான் இந்த பதிவே, நீ என்னடானா கடைசில வந்து அட்டனென்ஸ் கொடுக்குகுற,
மாமியார் வீட்ல கவனிப்பெல்லாம் பலமா இருந்துச்சோ...?



அன்புடன்...
சரவணன்.

said...

உன் கடமை உணர்வுப் பார்த்துக் கண்களில் காவிரி பெருகியதடா... கக்கப்போ சரவணா..

சங்கத்தின் மீது நீ கொண்ட பெரும் பாசத்தைக் கண்டு உனக்கு உடனடியாகச் சங்கப் பொறுப்பு வழ்ங்கப் படுவதற்கான நடவடிக்கையில் சங்க்த்தின் செயற்குழு இறங்கிவிட்டது.. வாழ்க உன் பாசம்.. வளர்க உன் பணி...

said...

//கண்களில் காவிரி பெருகியதடா... //

காவிரியா... ஆஹா...
கண்களில் (கண்)நீர் வரவில்லை என்பதைத் தான் இப்படி சொல்லுகின்றீர்களோ....

//உனக்கு உடனடியாகச் சங்கப் பொறுப்பு வழ்ங்கப் படுவதற்கான நடவடிக்கையில் சங்க்த்தின் செயற்குழு இறங்கிவிட்டது//


ஆஹா... சரவணா இதற்க்காகத்தானேட ஆசைப்பட்டாய்,


அன்புடன்...
சரவணன்.

said...

//கருத்தை கச்சிதமாக கவ்விக்கொண்டீர்கள் போங்கள்//

இது சொல்லித்தேன் தெரியனுமா...இது தெரியாம இருந்தா சங்கத்துக்கு தான அவமானம் (பின்ன எனக்கா)