Wednesday, August 16, 2006

எனது கிராமம் -ஒரு ரவுண்டு போகலாமா!!!

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது என்று நண்பர் திரு.கோவி.கண்ணன் அவர்கள் வருத்தப்பட்டிருந்தார், எனது பார்வையிலும் இங்கே சாதீயப் பேச்சுக்களும்,ஒரு வித இறுக்கமும் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது, இவைகளில் இருந்து உங்களை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள எனது கிராமத்திற்க்கு "சாலி"யா ஒரு ரவுண்டு போகலாம் வாரீகளா..?


ஓபன் பண்ணின(தேவு கூட டிஸ்கசன்ல இருந்த பாதிப்புல இருந்து இன்னும் வெளிவர முடியல) ஊருக்குள்ள போன ஒடனேயே ஒரு பெரிய ஆறு, அதுல மேல பாக்குற படத்துல இருக்குற மாதிரி பெரிய பெரிய யானையெல்லாம் குளிக்கும், அப்படியே நடந்து ரோட்டுக்கு வந்தா ரெண்டு பக்கமும் சும்மா பச்சை பசேல்னு எங்கே பாத்தாலும் பசுமையான வயல்வெளிகள், ரோட்டோரம் எப்பவும் வத்தாம ஓடுர கிளைஆறு, பக்கத்து வயல்களில் நாத்து நடுர பெண்களின் தெம்மாங்குப் பாட்டு,இடை இடையே குயில்களின் இசை ஆவர்த்தனம் வேறு, அப்படியே "அழகியபாண்டிபுரம்" உங்களை அன்போடு வரவேற்கின்றது, என்று தங்க நிற போர்டு, அப்படினு கற்பனைல இருந்தீங்கன்னா சாரி....,

கொஞ்சம் குருதய விட்டு கீழ எறங்குங்க எங்க ஊர்"வளநாடு" வந்திடுச்சு,என்னது..? ஊரப் பாத்ததும் உடனே கெளம்புறீகளா, ஓ! நீங்க எதிர் பார்த்த மாதிரி இல்லாம இங்கன வெறும் கருவ மரமும்,கரிச காடும்,சோத்துக் கத்தாலையுமா இருக்கா? என்னப்பூ பண்ணூறது இந்த பூமிலதேன் எங்க பொறப்பு சாவு எல்லாம், இதுதேன் எங்களுக்கு கஞ்சி ஊத்துர பூமி, இதுதேன் எங்க சாமி,

அவுக திரும்பவும் கெளம்புறேனு சொல்லுராகளா..?சரிப்பு நல்ல படியா போய்ட்டு வா.., ஆனா பஸ் இன்னும் ஒரு 2 மணி நேரமோ,3 மணி நேரமோ கழிச்சி தான் வரும் அதுவரக்கும் அந்தா தெரியுது பாரு கருவ மரம் அங்கென போய் ஒதுங்கி நில்லு, வழக்கமான சாதிச் சண்டை "பஸ் எரிப்பு" இல்லைனா பஸ் வரும் , என்னது கூட்டமா அதெல்லம் ரெம்ப இருக்காதுப்பூ,டாப்புலயும் பஸ்ஸோட சைடிலயும்தேன் இந்தப் பள்ளிக்கூட பக்கிபுள்ளக தொங்கிட்டு வரும் உள்ள சீட்டெல்லம் உனக்கு சிலாவத்தா கெடைக்கும் கவலப்படாத...

சரி மத்தவுக வாங்க நம்ம போவொம், எங்க ஊர் வளநாடு எனும் கிராமம், இது பரமக்குடி-ராமேஸ்வரம் NH-49 ரோட்டுல இருக்குற சத்திரக்குடி என்னும் "சின்ன டவுன்"லிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது,இது முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்டது(முதுகுளத்தூர் நியாபகம் இருக்கா..? திரு.அசுரன் மற்றும் திரு.செல்வன் ஆகியோர் தங்களின் சமீபத்திய பதிவிற்க்காக அடிக்கடி வந்து போன ஊர்).

எங்க ஊர்ல மொத்தம் 100 வீட்டுக்கும் கொறச்சலாத்தேன் இருக்கும் ஆமா,இதோ ஊரின் எல்லைல சோத்தாங்கைபக்கம் இருக்குறது கம்மாய்,

அங்க ஆம்பளைங்களுக்கும் பொம்பலைங்களுக்கும் தனித் தனியா ரெண்டு தொர இருக்கு,((யோய் ஜொள்ளு வாய மூடுயா பொம்பளைங்க தொரை-னு சொன்னாப் போதுமே அப்படியே வாயத் தொறந்துடிவியே)),

கம்மாக் கரயில் ஒரு கோவில் இருக்குது பாருங்க அது பிள்ளையார் கோவில்,(கோவில்னதும் "குமரனை" நினைத்து பாட்டு பாடனும்னு யாரும் "எஸ்கே"ப் ஆயிடாதீங்க ஊரச் சுத்திப் பார்த்ததும் அப்புறம் இங்க வரலாம்)

நொட்டங்கைப் பக்கம் இருக்குது பாருங்க கருவக் காடு அதானுங்க நாங்க ஒதுங்குற எடம்,
சரி இப்போ ஊருக்குல்லாற போவோம் அப்புறம் ஊர் சுத்தி முடிச்சிட்டு அடுத்த எல்லைப் பத்தி போசுவோம் சரியா..?

சரி வாங்க உங்க கை புடிச்சி எங்க ஊருல உள்ளவுக வீட்டுக்கெல்லம் கூட்டிட்டு போறேன்,வடக்குத்தெரு, நடுத்தெரு, தெக்குத்தெருனு 3 தெரு இருக்கு,மொதல்ல வடக்குத் தெருல இருந்து போவோம், ,ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பட்டப் பேரு இருக்கு,


வடக்குத் தெரு வாலிபர்களைப் பார்ப்போம்...

பப்பூன் மாமா வீடு
கட்டப் பஞ்ஜாயத்து மாமா வீடு
சோவி வீடு*
கூலயன் வீடு
கொச வீட்டு பாலமுருகன் வீடு(குயவர் வீடு)
வைத்தியம்பிள்ளை வீடு
பாக்கியம்பிள்ளை வீடு
கொட்டைக்கார்ரு வீடு(கொட்டகை வீடு)
ஆசாரி வீடு
மீன்கார கலாஅக்கா வீடு
உள்ளாக்கு வீடு
பார்வகார்ரூ வீடு(வேப்பிள்ளையால் மந்திரித்து "பார்வை" பார்ப்பவர்)
காக்காயன் வீடு
வெரச்சூம்பி வீடு
சைக்கிள்கட நாடார் வீடு
வழிமரச்சான் கலப்புக் கட(எங்க ஊருல இருக்குற "பெரிய"டீ-க்கட)
பூச்சாண்டி வீடு
பல்லு வீரையா வீடு

*சோவி வீடு- தானுங்க நம்ம வீடு(இதப் பாத்துட்டு ஏதோ "சோவி"யத்துக்கும் எங்களுக்கும் தொடர்புனு நெனைச்சுடாதீங்க, முன்னோர்கள் சோவிமுத்து வச்சி விளையாடுவாங்களாம் அதான்)



அடுத்தாப்புல நடுத்தெரு நட்டாமுட்டீங்க பத்தி...

தலைவரு குருசாமி வீடு
கோணக்கழுத்து வீடு
வெறுகு வீடு
சண்டரிச்சா வீடு
கொசவீட்டு போஸ் வீடு
மூலிக்காலி வீடு
வண்ணவீட்டு கணேசன் வீடு

கடைசில தெற்குத்தெரு மச்சாங்க வீடு

கடைகார கூரி அண்ணன் வீடு
சேன வீடு
மொண்டாசு வீடு
தொட்டுநக்கி வீடு
கரம்ப வீடு
வாத்து வீடு
அழகர் வீடு
மசங்கி வீடு
மாக்கான் வீடு
கோடாங்கி வீடு
குச்சிக்காலு வீடு
குலும வீடு
மூக்கன் வீடு
மண்ணுவீடு
எலியன் வீடு
வடிவேல் வீடு

(கோடாங்கி வீட்டுல முத்துப் போட்டு க.பி.க எல்லாரும் எப்பக் கல்யாணம்னு தெரிஞ்சிக்கலாம், அப்படியே வேறு பெயர்களில் எழுதும் வலைப் பதிவர்கள் பற்றிய உங்களின் சந்தேகத்தையும் கேட்டுக்கறலாம்.)

ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லாம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,

சரி தெருவெல்லாஞ் சுத்தியாச்சா வாங்க ரோட்ல இருக்குற கடகார கூரி அண்ணே கடயில் கலரு குடிப்போம்(உங்க "மனதின் ஓசை" 24% பூச்சி மருந்துனு சொல்லுதா, அதெல்லாம் ஒங்க டவுனு கலருலதாம்பூ, இதுநம்ம காளிமார்க், இங்கின இதுதேன் கெடைக்கும், இதத்தேன் நான்கலும் வருச முச்சூடும் குடிக்கிறேன்,) கடய ஒட்டுனாப்புல நாலஞ்சு ஆளுக்க படுத்துருக்ககா பாருங்க இதுதேன் "சங்கம்", இங்கதேன் பஞ்சாயத்துப் பூராம் நடக்கும்.(பஞ்சாயத்து நடக்குறதே பெரிய காமெடியா இருக்கும்)

இப்போ ஊரோட அடுத்த எல்லக்கு வந்தாச்சுப்பூ...அந்தா தெரியுது பாருங்க கட்டடம் அது பால்வாடி(எங்க ஊர் LKG,UGK) அதுக்குப் பக்கதுல இருக்கு பாருங்க பெரிய கட்டடம் அதுதேன் பள்ளிக்கூடம்(ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), இன்கென தேன்ம்ப்பூ நா 5 ஆப்பு(ஆஹா.. இன்கேயும் ஆப்பா?) வரைக்கும் படிச்சேன்,


எங்கவூர்ல நீங்க படிச்ச மாறி இங்கிலீசு பள்ளிகொடம்லா இல்லப்பூ,இப்போதேன் சின்னப் புள்ளக் குட்டிக பூராம் ஆட்டோல போய் "புதுடவுனு" சத்தரக்குடில இங்கிலீசு படிக்கிதுக,

சரி பள்ளிக்கூடத்துலக்கும் கெழக்கால அந்தா தெரியுது பாருங்க அது கருசூரணி (இந்த ஊரணி பற்றிய ஒரு பதிவு இன்னும் டெவலப் பண்ணாம "save as Draft"ல இருக்கு)அப்படியே கொஞ்சம் தள்ளிப் பாருங்க பன மரம் தெரியுதா...

சரி பொம்பளைக எல்லோரும் அப்படியே வீட்டுக்குப் போங்க (பாத்துப் போங்க போர வழில கருவ முள்ளூம்,ஒட மரத்து முள்ளூம் இருக்கும்)நாங்க அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,(கவிதாக்கா இந்த அணீலையும் கூட்டிடு போக்கா)

சரி இப்போ எல்லாரும் வீட்டுக்கு வந்தாச்சா, வாங்க, அம்மா கத்தரிவத்தல் புளிக்கொழம்பு வச்சிருக்காங்க,எல்லோரும் சாப்புடுவோம்,

சாப்டாச்சுல எல்லாரும் அப்படியே திண்ணைல கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காந்து பேசுவோம்,கிராமங்களின் சிறப்பே ஒற்றுமையாக கொண்டாடப்படும் விழாக்கள் தான்,மாரியம்மன் கோவில் மொழக்கட்டு,கிருஷ்ண ஜெயந்தி-மஞ்சத்தண்ணி,மாவிடியான் கோயில் திருவிழா, மடக்கிரயான் கோயில்,அய்யனார் கோயில் குருதஎடுப்பு, காளி கோயில் கலியாட்டம்னு நெரய அயிட்டம் இருக்குப்பூ, அதுலயும் ஒவ்வோரு விழாவுக்கும் நாடகம் வேற நடக்கும்,அதுல வர பப்பூன் காமிக்கு,பா(வை)வக்கூத்து அடாடா...
அதெல்லாம் "உண்மையாகவே"வாழ்ந்த காலங்கள்...

கம்மா அழியும் போது மீன் புடிக்க ஊர் சனங்க பூராம் கச்சாவ(யோஹன் உங்க ஊர்ல "கச்சாவுக்கு"என்ன பேருனு ஒரு ஆராய்ச்சிப் பதிவு ரெடி பண்ணுங்க) தூக்கிகிட்டு ஓடிவந்து ஒன்னா கூடுவாக,அதப் பாக்க அப்படியே திருவிழாக் கூட்டம் மாதிரித்தேன் இருக்கும், அதே மாதிரி கிராமத்து வெளையாட்டும் கிளித்தட்டு,ஒழிஞ்சிபிடிச்சு,போந்தா(பளிங்கி),கிட்டி,கல்லா மண்ணா அப்படினு அது ஒரு லிஸ்ட் இருக்கு, இதப் பத்தியும் தனிப் பதிவு உண்டு,


ஊரச் சுத்தி காமிச்சாச்சு,மணி 5:00 ஆச்சு அருப்புக் கோட்டையில இருந்து ரத்தினா(எங்க ஊருக்கு வரும் ஒரே தனியார் பேருந்து)வரும் அதுல போய்டுவோம் அப்படி இல்லைனா 6:30க்கு வர்ர 9C-ல போயிடலாம்,

அந்தா ரத்தினா வந்திடுச்சு கெளம்புவோமா...

என் கிராமத்திற்க்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு அழைத்து சென்றேன், நான் எழுதிய பதிவுகளில் இதுவே மிகவும் திருப்தியான பதிவாக கருதுகிறேன், இனி அடிக்கடி "இதுபோல்" திருப்தியடைய எண்ணியுள்ளேன்.
என் எழுத்து நடையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், அது இனி வரும் என் எழுத்துக்களை திருத்த உதவும்,
சரி எங்க ஊருக்கு வந்தீகளே எப்படி இருந்துச்சு கொஞ்சம் சொல்லிட்டு போங்க நணபர்களே...


(படங்கள் :- கூகுளாண்டவர் துணை)


அன்புடன்...
சரவணன்.

Saturday, August 05, 2006

சோனியா அகர்வாலும்-சரவணா ஸ்டோர்ஸும்


போலீஸ்க்கார்: ஏண்டா "சரவணா" ஸ்டோர்ஸ்ல திருடுன...?

திருடன்: சோனியா அகர்வால் தான் சார் சொல்லுச்சு

போலீஸ்க்கார்: என்ன சொல்லுச்சு..?

திருடன்:எடுத்துக்கோ.... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோனு,


அன்புடன்...
சரவணன்.

நாங்களும் படம் போடுவோம்ல...

வலைப்பக்கங்கள்ள இப்போ எங்க பார்த்தாலும் படம் போடுறேன் பேர்வழினூ தொப்பி ஒன்ன போட்டுகிட்டு "ஓணாண்டி படம்" புடிக்கிற நம்ம கைப்பு, அப்புறம் "படகு"புகழ் பொன்ஸ்-னு கெளம்பிடுறாக சரி நம்மளும் எதாவது படம் போடலாம்னு பார்த்தா அப்புறந்தேன் தெரியுது அதுக்கு கேமரா பொட்டி வேனுமாமுல அதுக்கு எங்கிட்டு போறது, அதான் நமக்கு வந்த பழய மெயில்ல இருந்து ஒரு 2 படத்த போடுவமேனு இந்தப் பதிவு,


1, என்னைய யாருமே "ஆறு" போட கூப்பிடலை, ஹி..ஹி..ஹி அதான் நானாவே போட்டுகிட்டேன்.




2, மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்கும் போது கைப்பூ படிச்ச படிப்ப நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்,









3,இந்த மாச அட்லூசு ராசாத் தம்பி கணக்கு பரிசைக்கு போச்சு இன்னும் வரலை, யாராவது பார்த்தீங்களா...?






அன்புடன்...
சரவணன்.