Monday, April 16, 2007

நாகர்கோவில் வலைப்பதிவர்கள் சந்திப்பில் நிகழ்ந்தவை...

நான் வலைப்பதிவு உலகிற்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் சக பதிவர்களை சந்திப்பது இதுவே முதன்முறை! (தேவுடனும்,செந்தழல் ரவியுடனும் மட்டுமே தொலைப்பேசியுள்ளேன்)மதியம் 1 மணிக்கு வருவதாக இருந்த சிறில் 2:45க்கு வந்ததால் சந்திப்பு சிறிது தாமதமாகவே தொடங்கியது.(சிறில் தமிழ் நாட்டுக்கு வந்துட்டீகல்ல இப்படித்தான் இருக்கனும்):))

நான் "எனது" கருப்புக் குதிரை பல்சரில் (இளா!இங்கு நான் எனது என்பது ஆணவம் அல்ல, தன்னிலை விளக்கம்:))))அங்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் இருவர், ஒருவர்(ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்,கருப்புவெள்ளை கட்டம் போட்ட இரண்டுபாக்கெட் சட்டை,இனிஷியலுடன் கூடிய மோதிரம்,பெரிய டயல் உள்ள கைக்கடிகாரம் , ஜீன்ஸ், காலில் நைக்- அமெரிக்க ரிட்டன் போல் இருந்தவர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்கள்.மற்றொருவர் எளிமையின் வடிவம்,இந்த மண்ணின் மைந்தர் திரு.மா.சிவக்குமார் அவர்கள்,

அறிமுகம் முடிந்து அருகில் இருக்கும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே தற்பொழுதைய பதிவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.எனது எழுத்துக்கள் பற்றிக் கேட்டார்கள்,நான் விவாத மற்றும் சீரியஸ் பதிவுகளில் அவ்வளவாக வருவதிலை ஆனால் அனைத்து வித பதிவுகளை படிப்பேன் என்றும் முதல் சாய்ஸ் நகைச்சுவையுடன் கூடிய பதிவுகள் தான் என்றும் கூறினேன்.பின் சிறில் தானும் நகைச்சுவை பதிவு எழுதுவேன் என்றும் ஆனால் யாரும் அழைக்கவில்லை என்றும் வருத்தப் பட்டார், வருத்தமில்லா வாலிபர் சங்கமே இதோ ஒரு நல்லவரு சிக்கி இருக்காரு ஃபிரியா இருந்தீங்கன்னா சொல்லுங்க வரும்போது சங்கத்துக்கு கூட்டிக்கொண்டு வருகிறேன்!

சிறிது நேரத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டன் வந்து கலந்துகொண்டார், பின் மூவரும் திரு.குமரிமைந்தன் என்னும் மூத்தப் பதிவரை சந்திக்க சென்றோம். அங்கு அவர் நண்பருடன் இருந்தார். திரு.குமரிமைந்தன் பார்ப்பதற்க்கு நமது சக பதிவர் ஐயா திரு.ஞானவெட்டியானை நினைவுப்படுத்தக் கூடிய தோற்றம் அதே கம்பீர(பயமுறுத்த கூடிய) மீசை!:)))

அதன் பின் தான் ஆரம்பித்தது வி-வாதம், என்னன்னவோ பேசினார்கள் குமரிக்கண்டம் - லெமூரியா- வங்கதேச நிலப்பரப்பு - அமெரிக்க ஏகாதிபத்தியம் - கம்யூனிஸ்ட் - அமெரிக்க ஆப்பிரிக்க நிற வேற்றுமைக் காரணங்கள் - ரஷ்யா - லெனின் - ஹிட்லர் -(சிறில் 5 முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு நெளிந்துகொண்டிருந்தார்,அவ்வப்போது எனக்கு சில சினேகப் புன்னகைகள்) ஜெர்மனிய மொழி - ஆரிய திராவிட விவாதம் -ஆயக்கலைகள் 64 - பாதரசத்திலிருந்து தங்கம் - உலகஷேர்மார்க்கெட்டில் இந்தியாவின் நிலைப்பாடு - பெரியார் - ராஜாஜி - தமிழக அரசியல் - (அவ்வ்வ்வ்வ்--- இது நான் தானுங்க!இப்படி சிக்கீட்டியே சரவணா), ஒரே ஆறுதல் வலைப்பதிவின் தற்பொழுதைய நிலை பற்றி பேசவில்லை, திரு.குமரிமைந்தன் அவர்கள் பதிவுகளை படித்து பல நாட்கள் ஆகிவிட்டதாம். உண்ணையாகவே ஒரு நல்ல விவாதம் தான் ஆனால் என்னால் தான் அனைத்து விசயங்களையும் உள்வாங்கிக் கொள்ள சிரமமாக இருந்தது.வெளியில் நல்ல மழை, சென்றால் நனைந்துவிடுவேன் வேறு வழியின்றி விவாதம் நடக்கும் போது நான் ஒரு ஈ போல அமைதியாக இருந்தேன் ஏனென்றால் அனைவரும் இரும்பு அடித்துக் கொண்டிருந்தனர், விவாதத்தின் நடுவில் சிறில் அவர்கள் என்னிடம் " நாங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கிறோம் நீங்க இதை வச்சு காமெடியா எப்படி எழுதுவதுனு யோசிக்கிறீங்களா என்றார்).

விவாதம் மிகவும் சீரியசாக போய்க்கொண்டிருந்தது பின், சிறில் தான் குமரிமைந்தனிடமிருந்து மாசியையும் அரவிந்தனையும் வழுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்( நான் அதற்கு முன்பாகவே பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டேன்:))).பின் நாங்கள் சென்ற இடம் SLB பள்ளி வளாகம், எனக்கு மகிழ்ச்சியே( ஹி ஹி .. இங்கு தானே பெண்கள் மாலைநேரத்தில் வாக்கிங் வருவார்கள்).அப்பொழுது சகபதிவர் வல்லிசிம்ஹனிடமிருந்து மாசி அவர்களுக்கு அழைப்பு வந்தது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு!

அங்கு சென்றதும் விவாதம் மீண்டும் ஆரம்பமானது தற்பொழுது களத்தில் அரவிந்தன் - சிறில். என் அருகில் சக "ஈ" மாசி அவர்கள்,அவர்களிருவரின் விவாதங்கள் நாகரீகமான் முறையிலேயே இருந்தது. சிறிலுக்கு அவரின் சகோதரியிடமிருந்து ஃபோன் வர, மீண்டும் சென்னையில் சந்திக்கலாம், கண்டிப்பாக வரவும் என்று அழைப்புவிடுத்து விட்டு விடைபெற்றர்.பின் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் , காமெடி பதிவுகள் எழுதுவதற்கு போதிய சென்ஸ் இல்லை என்று அரவிந்தன் வருத்தப் பட்டார்( யாருக்குத்தான் இங்கு கிலோக்கணக்கில் இருக்குது?)அவர்களிருவரும் காந்தீயம்,RSS பற்றி பேசினர்.மாசி அவர்கள் ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையை சொல்ல அதற்கு மாற்றுக் கருத்துடைய கதையை அரவிந்தன் சொன்னார் அதே ராமகிருஷ்ணரிடமிருந்து!
(ரெம்ப பெரிய மக்கள்களை சந்திக்கப் போற சைலண்டாவே இருனு சொன்ன புலிபாண்டி சிவா எங்கேயா உன் காலு(புலிக் கால் சூப்பு வைக்க அல்ல))

சிறுது நேரத்தில் அரவிந்தனும் சென்றுவிட நானும் மா.சிவக்குமார் மட்டுமே அங்கிருந்தோம்.பதிவுகள் பற்றிப் பல விசயங்கள் போசினோம். கிரீமி லேயரின் சமீபத்திய பதிவுகள், மகேந்திரனின் நறுக் தலைப்புகள், பொன்ஸின் fountain - head-ayn-rand, திரும்பிப் பார்க்கும் சூரியன் திரு.ஜோசப், சங்கத்து பதிவுகள், மை ஃபிரண்ட்ன் முதல் பின்னூட்டம்,அமுக,vsk அவர்களின் லப்டப்,vsk விற்கும் கோவியாருக்கும் உள்ள நட்பு,சிபியின் லொள்ளு,வெட்டியின் கொல்ட்டி,கொத்ஸ்ன் பின்னூட்டம்,துளசி டீச்சர், உஷா,வாத்தியாரின் வகுப்பறை,அபிஅப்பா கண்மனி போன்ற புதிய பதிவர்கள்,பாஸ்டன் பாலாவின் படிக்கும் திறன்,பாலபாரதி,டோண்டு,ரவியின் வேலைவாய்ப்பு பதிவு,லக்கியாரின் உடன்பிறப்பு பதிவுகள்,மற்றும் பல...

பின் இருவரும் நாகராஜ கோவில் சென்று (கடைசிவரை சாமி கும்பிடவில்லை)அங்கும் பேசினோம், ஒரு சகோதரன் போல என்னிடம் அன்பாகவும் என் கம்பெனி பற்றியும் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் எனக்கு அறிவுரைகள் சொன்னார். நன்றி திரு. மாசி அண்ணன் அவர்களே. பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கேயே இரவு உணவு. ரெம்ப நாள் கழித்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி!அப்பா, அம்மா இருவரும் என்னை மிகவும் பாசமுடன் நடத்தினர். எனக்கே ஆச்சர்யம் முதன் முறை சந்திக்கும் ஒரு பதிவரின் அன்பு என்னை நெகிழ வைத்தது. (என்ன ஒரு கவலை வழக்கமான சனிக்கிழமைகாய்ச்சல்(saturday fever) டானிக் குடிக்க முடியவில்லை!)இவ்வாறாக என் முதல் பதிவர்கள் சந்திப்பு இனிதே முடிவுற்றது.


அன்புடன்...
சரவணன்.

Saturday, April 14, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நாகர்கோவிலில்.

அன்பு வலைப்பதிவர்களுக்கு!
"சற்றுமுன்" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது! நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.

தொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)



அன்புடன்...
சரவணன்.