Monday, June 12, 2006

பாரதியின் அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்.


அன்புடன்...
சரவணன்.

0 பின்னூட்டங்கள்:-: